எச்.ஐ.வி மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
24.4.2022 அன்று பிஷப் ஹீபர் கல்லூரியின் (திருச்சிராப்பள்ளி) சமூகப்பணித்துறை மாணவி செல்வி. சினேகா , முனைவர். கார்டர் ப்ரேம்ராஜ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை வானவில் திட்டத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தினார். இதன் சாராம்சம் எச்.ஐ.வி தொற்று உடைய குழந்தைகளுக்கு தேர்வு குறித்த பயத்தை போக்கும் வண்ணமும், அவர்களின் தாய் தந்தையர்களுக்கு எவ்வாறு தேர்வை எதிர்நோக்கும் குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.. இதில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளியின் தலைமை ஆலோசகர் திரு. லெட்சுமணக்குமார் ஐயா அவர்களும் , மன்டையூர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு. டேவிட்.கிஷோர் அவர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.. கூடவே வானவில் திட்டத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சகோதரர் . செபாஸ்டியன் லாசர் தலைமை உரை வழங்கினார். இது மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்..